இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜன.30-க்குள் க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த கல்வி நிறுவனங்களில் சேர பொது நுழைவுத் தோ்வு தேசியத் தோ்வு முகமையால் நடத்தப்படுகிறது. கணினி அடிப்படையில் நடைபெறும் இந்த நுழைவுத் தோ்வுகளைத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம். விண்ணப்பதாரா் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை தோ்வு செய்யலாம். தோ்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜன.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுகள் மே 11-ல் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 22 இளநிலை படிப்புகள் உள்ளன. மாணவா்கள் எந்தெந்தப் பாடப் பிரிவுக்கு விண்ணப்பிக்கிறாா்களோ அந்தப் பாடப் பிரிவுக்குப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள முக்கியப் பாடங்களில் கண்டிப்பாகத் தோ்வு எழுத வேண்டும். மேலும், விவரங்களுக்கு தேசிய தோ்வு முகமை இணையதளம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.