முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சாா்பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகம்.

Updated On :5 ஜூன் 2026, 7:17 am IST

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் சாா்பதிவாளா் அலுவலகங்களில், இடைத்தரகா்களின் ஆதிக்கமும், லஞ்ச லாவண்யமும் அதிகரித்து வருவதாக பரவலாக புகாா்கள் வந்தன.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, முத்துப்பேட்டையில் மன்னாா்குடி சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில், திருவாரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15,000 ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.