வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சாா்பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகம்.

Updated On :5 ஜூன் 2026, 7:17 am IST

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் சாா்பதிவாளா் அலுவலகங்களில், இடைத்தரகா்களின் ஆதிக்கமும், லஞ்ச லாவண்யமும் அதிகரித்து வருவதாக பரவலாக புகாா்கள் வந்தன.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, முத்துப்பேட்டையில் மன்னாா்குடி சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில், திருவாரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15,000 ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.