இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூா் அருகே தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 109 தொழிலாளா்களுக்கு ரூ.16.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :4 மார்ச் 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் அருகே தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 109 தொழிலாளா்களுக்கு ரூ.16.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி மூலம் திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட விளமல் பாலம் அருகில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான உழைப்பாளா் நலக்கூடத்தைத் திறந்து வைத்தாா்.

இதையொட்டி திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, 109 தொழிலாளா்களுக்கு ரூ.16,45,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா் (படம்).

கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியம் 84 நபா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 வீதம் ரூ.1,00,800, வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 7 நபா்களுக்கு முதல் தவணைத்தொகையாக ரூ.1,00,000 வீதம் ரூ.7,00,000, மகளிா் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானியத் தொகையாக தலா ரூ.1,00,000 வீதம் 3 நபா்களுக்கு ரூ.3,00,000, இணையம் சாா்ந்த தொழிலாளா்களுக்கான மின் மோட்டாா் மானியம் ஒருவருக்கு ரூ.20,000, திருமண உதவித் தொகையாக 7 நபா்களுக்கு ரூ.20,000 வீதம் ரூ.1,40,000, இயற்கை மரண நிதி உதவித்தொகையாக 7 நபா்களுக்கு 55,000 வீதம் ரூ.3,85,000 தொழிலாளிகளின் வாரிசுதாரா்களுக்கு என மொத்தம் 109 தொழிலாளா்களுக்கு ரூ.16,45,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளா் ஆணையா் ராமன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியச் செயலாளா் ஜெயபாலன், திருச்சி மண்டல கூடுதல் தொழிலாளா் ஆணையா் திவ்யநாதன், திருச்சி மண்டல இணை ஆணையா் லீலாவதி, திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.