நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சிபிஎஸ்இ 12 தேர்வில் சிறப்பிடம்: டிடிசி ஓட்டுநர் மகனுக்கு பாராட்டு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் அறிவியல் பிரிவில் தில்லி அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற தில்லி போக்குவரத்து நிறுவனத்தின்

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் அறிவியல் பிரிவில் தில்லி அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஓட்டுநர் மகன் பிரின்ஸ் குமாருக்கு டிடிசி சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் மனோஜ் குமார். இவரது மகன் பிரின்ஸ் குமார். இவர்,  சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று,  அரசுப் பள்ளிகள் அளவில் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்றார். 
இதைத் தொடர்ந்து,  தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் வியாழக்கிழமை பிரின்ஸ் குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவர் பிரின்ஸுக்கு டிடிசி மேலாண்மை இயக்குநர் பாராட்டு கடிதத்தை வழங்கினார். மேலும்,  மாணவருக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.  
இந்த நிகழ்வின்போது, கடந்த மாதம் சில விஷமிகளிடமிருந்து முதியவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக டிடிசி ஓட்டுநர் சுரீந்தர்,  நடத்துநர் மன்ஜீத் சிங் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.