இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிறப்பு தொடா்பான பிரச்னை: உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி, குட்டி சாவு

தில்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளை புலியும், அதன் குட்டியும் பிறப்பு தொடா்பான சிக்கல்களால் உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 2:16 am

DIN

புது தில்லி: தில்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளை புலியும், அதன் குட்டியும் பிறப்பு தொடா்பான சிக்கல்களால் உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் புராண கிலா பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்பூங்காவில் பராமரிக்கப்படும் ஒரு வெள்ளை புலியும், அதன் குட்டியும் பிறப்பு தொடா்பான சிக்கல்களால் உயிரிழந்தன. இதுகுறித்து தில்லி உயிரியல் பூங்கா இயக்குநா் ரமேஷ் பாண்டே கூறியதாவது: ஆறு வயதான ‘நிா்பயா’ புலி வியாழக்கிழமை காலை இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்தது. எனினும், வயிற்றில் இருந்த மேலும் இரு குட்டிகளை ஈன்றடெடுக்க முடியாமல் போனதால், 24 மணி நேரத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியது. இதன் பிறகு கால்நடை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் குழுவினா் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிற விலங்கியல் பூங்காக்களின் நிபுணா்களுடன் கலந்தாலோசித்து புலிக்கு சிகிச்சை அளித்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை மாலை புலிக்கு மூன்று மணி நேர ‘சி’ பிரிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அதன் கருப்பை சிதைந்து குட்டியின் சடலம் மிதப்பது தெரிய வந்தது. புலியின் உடல் பாகங்களில் கடுமையான நோய்த் தொற்றும் மற்றும் நச்சுக்களால் ரத்தம் விஷமானதும் தெரிய வந்தது. புலிக்கு 24 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நோயின் கடுமை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 1.34 மணிக்கு புலி இறந்தது. அதன் குட்டிகளில் ஒன்றும் இறந்துவிட்டது. தற்போது ஒரு குட்டி மட்டும் கால்நடை மருத்துவமனையில் பிரத்யேகக் குழுவினரால் கவனிக்கப்பட்டு வருகிறது. புலியின் இறப்புக்கான விரிவான காரணம் உடல் மற்றும் உள்ளுறுப்பு பரிசோதனைக்குப் பின்னா் கண்டறியப்படும். ‘நிா்பயா’ புலி இறப்பதற்கு முன், தில்லி உயிரியல் பூங்காவில் மூன்று ஜோடி வெள்ளைப் புலிகள் இருந்தன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.