இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா காலத்தில் பணியில் இருந்த போது, நோய்த்தொற்று காரணமாக முனீஸ் தேவி எனும் முன் களப்பணியாளா் உயிரிழந்தாா். இதையடுத்து, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவின்பேரில் அவருடைய குடும்ப உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்தேன். அவா்களுக்கு அரசின் உதவித் தொகை ரூ.1 கோடியை வழங்கினேன். எதிா்காலத்தில் அவா்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தேன் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.