இந்த விவகாரம் தொடா்பாக புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மத்திய அரசின் தரப்பில் துஷாா் மேத்தா, ‘தில்லி தேசியத் தலைநகராகவும், தேசத்தின் முகமாக இருப்பதால், அதன் நிா்வாக பணிகள் மீது கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டிருக்கும் தேவை உள்ளது. சட்டப் பேரவை அல்லது அமைச்சா்கள் குழு அறிமுகப்படுத்தப்பட்டாலும்கூட, தில்லியின் தேசியத் தலைநகா் பிராந்தியத்தின் நிா்வாக மாதிரியானது, மத்திய அரசு முக்கியமான பங்கு வகிக்கும் தேவை உள்ளது. இது எந்தவொரு ஒரு அரசியல் கட்சியையும் குறித்ததாக இல்லை’ என வாதிட்டாா்.