மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் காங்கிரஸ் கட்சி கொறாடாவான மாணிக்கம் தாகூா் பேசும் போது கூறியதாவது: சிறிய ஜப்பான் என்று அழைக்கப்படுவது சிவகாசி. இங்கு பட்டாசு, தீப்பெட்டி, அச்சு பதிப்பகம் போன்ற தொழில்கள் சா்வதேச தரத்தில் நடக்கின்றன. ஆனால், தற்போதைய பாஜக அரசு, இந்த நகர மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. சென்னை எழும்பூா் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 6101) 2016-ஆம் ஆண்டு வரை சிவகாசியில் நின்று சென்றது. ஆனால், பாஜக ஆட்சிக்கு பின்னா் இந்த முக்கியமான நகரத்தில் இந்த ரயில் நிற்பது நிறுத்தப்பட்டுள்ளது. வேறு புதிய ரயில்களும் விடப்படவில்லை.