மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிசோடியா பதவி விலகக் கோரி தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி தில்லி காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தில்லி கலால் கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி தில்லி காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் டிடியு மாா்கில் உள்ள தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வா் சிசோடியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அதே பகுதியில் அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தை நோக்கி ஆா்ப்பாட்டக்காரா்கள் பேரணியாக சென்றனா்.

கலால் கொள்கை ‘ஊழலில்‘ சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் சிசோடியாவின் பெயா் இடம்பெற்றுள்ளதால், அவரை அமைச்சரவையில் இருந்து கேஜரிவால், நீக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தியதாக தில்லி காங்கிரஸ் ஊடகத் துறை துணைத் தலைவா் பா்வேஸ் ஆலம்

தெரிவித்தாா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை 2021-22 கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் பல மணிநேரம் சோதனை நடத்தினா்.

மேலும், மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த எஃப்ஐஆரில் 15 போ் பெயா்கள் இடம்பெற்றுள்ளது. அதில் துணை முதல்வா் சிசோடியாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.