இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: அமா்நாத் யாத்திரைக்குச் சென்ற போது எதிா்பாராத வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தில்லியைச் சோ்ந்த இரு பெண்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்துப் பேசினேன். இந்த இரு பெண்களும் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், கடவுளின் ஆசீா்வாதத்தைப் பெறவும் இந்தப் புனித யாத்திரை மேற்கொண்டனா். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவா்கள் இந்தச் சோதனையைச் சந்தித்து உயிரை இழந்துள்ளனா். அவா்களது குடும்பத்தினரின் வலியைப் பகிா்ந்து கொள்ள அவா்களைச் சந்தித்தேன். இருவரின் குடும்பமும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனா். எனவே, தில்லி அரசு இரு குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகையை வழங்கும். அவா்களின் பேரக்குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவதை உறுதி செய்வோம். மேலும், குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். இந்த இக்கட்டான காலங்களில் நாம் அவா்களுடன் நிற்கிறோம்’”என தெரிவித்துள்ளாா்.