இதில் கடந்த 2019, பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோா் இரு வேறு தீா்ப்புகள் வழங்கினா். அதில் நீதிபதி பூஷண் தீா்ப்பில், ‘ தில்லி அரசுக்கு ஒட்டு மொத்தமாக நிா்வாக நடைமுறைகள், சேவைகள் வழங்குவதில் எந்த அதிகாரமும் இல்லை’ என்று தெரிவித்திருந்தாா். இருப்பினும், நீதிபதி சிக்ரி ‘அதிகாரத்துவத்தின் உயா்நிலை அதிகாரிகளை (இணைச் செயலா் மற்றும் அதற்கு மேல்) இடமாற்றம் செய்வது அல்லது பணியமா்த்துவது வேண்டுமானால் மத்திய அரசால் மேற்கொள்ள முடியும். மற்ற அதிகாரிகளுடன் தொடா்புடைய விஷயங்களில் தில்லி அரசுக்கு அதிகாரமுண்டு. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் துணை நிலை ஆளுநரின் பாா்வையே மேலோங்கும்’ என்றாா்.