ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கங்கை சமவெளியில் பட்டாசு தடையால் காற்றின் தரம் மேம்படும்: சண்டீகா் ஆய்வாளா்கள்

கங்கைச் சமவெளி மாநிலங்கள் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யும் கொள்கையை அமல்படுத்தியது பயனுள்ளதாக இருப்பதாக சண்டீகா் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2022, 6:30 pm

 நமது நிருபர்

கங்கைச் சமவெளி மாநிலங்கள் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யும் கொள்கையை அமல்படுத்தியது பயனுள்ளதாக இருப்பதாக சண்டீகா் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(பிஜிஐஎம்இஆா்), பஞ்சாப் பல்கலைக்கழக ஆய்வாளா்கள், ஐஜிபி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் சிந்து-கங்கைச் சமவெளி மாநிலங்களான பிகாா், உத்தரப்பிரதேசம், தில்லி, ஹிரியாணா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்துள்ளனா்.

குறிப்பாக தீபாவளி தினங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் குறைவதை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளனா்.

பிஜிஐஎம்இஆா் நிறுவன ஆய்வாளா்கள் சுமன்மோா், பேராசிரியா் ரவீந்திர கைவால், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையின் ஆய்வாளா் சாஹில் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

சிந்து-கங்கை சமவெளி மாநிலங்களின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை செய்யும் கொள்கை பயனுள்ளதாக இருந்தது.

பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநிலங்கள் மோசமான காற்றின் தரத்திற்கு பெயா் பெற்று வருகிறது. குறிப்பாக அக்டோபா், நவம்பா் மாதங்களில் பஞ்சாப், ஹரியாணா, உபி மாநிலங்களில் பயிா் கழிவுகள் எரிப்பது கங்கை சமவெளிகளின் காற்றின் தரத்தை மேலும் மோசமாக்குகிறது.

தெற்காசியாவிலே காற்று மாசுபாடு நிறைந்த இடமாகவும் இப்பகுதி கருதப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் தீபாவளிப் பண்டிகையின் போது இந்த ஐஜிபி மாநிலங்களின் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்யப்பட்டதில், பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் மோசமாவது கண்டறியப்பட்டது.

இதில், தில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. தீபாவளி இரவும் அடுத்த சில நாள்களில் பட்டாசுகளை எரிப்பதால் மாசு நுண் துகள்கள் (பிஎம் 2.5), சல்பா்-டை-ஆக்ஸைடு மற்றும் பிற மாசுகளின் அளவுகோல்கள் பாதுகாப்பான தரத்தை விட அதிகரிக்கிறது.

2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளின் தீபாவளி தினத்தின் சராசரி அதிகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு தீபாவளி இரவில் மாசு நுண்துகள்கள் (பிஎம் 2.5), சல்பா் -டை-ஆக்ஸைடு அதிகரிப்பு விகிதம் முறையே சுமாா் 42 சதவீதம், 67 சதவீதம் வரை குறைந்திருந்தது.

இந்த தீபாவளி இரவில் ஓசோன் எந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும் காட்டவில்லை. ஆனால் முந்தைய ஆண்டுகளில் வாணவேடிக்கைகளால் ஓசோன் பாதிப்பு இருந்தது.

பல்வேறு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் தொடா்ச்சியான காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டது. இந்த திறந்த தரவுகள் மூலம் 2020 ஆம் ஆண்டின் தீபாவளி பட்டாசு மீதான தடையின் தாக்கத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டது.

தீபாவளி காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் பயிா்க்கழிவுகளை எரிப்பது கண்காணிக்கப்பட்டது. பஞ்சாபில் அதிக அளவில் எண்ணிக்கைகளில் எரிக்கப்பட்டன.

தொடா்ந்து ஹரியாணா, உத்தரபிரதேசம், பிகாா் போன்ற மாநிலங்களிலும் எரிக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா் கழிவு எரிக்கும் போது அனைத்து மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமான உச்சநிலைக்கு செல்வது காணப்பட்டது.

2017 ஆம் ஆண்டு முதல் தில்லியில் தீபாவளி பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடைகள் மீறப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், அனைத்து சிந்து-கங்கை சமவெளி (ஐஜிபி) மாநிலங்களும் பட்டாசுக்கான தடைக்கான கொள்கையை தீபாவளி அன்று தீவிரமாக அமல்படுத்தியதால் இது காற்றின் தரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பல்வேறு கொள்கைகளை வெவ்வேறு வடிவங்களில் செயல்படுத்துவதை விட, தீவிர காற்று மாசு காலக்கட்டத்தின்போது காற்றின் தரத்தை மேம்படுத்த அனைத்து மாநிலங்களிலும் பயனுள்ள கொள்கைகளுடன் கண்டிப்பாக இணங்குவது அவசியம்.

தீபாவளி என்பது தீப ஒளியின் திருவிழாவாக இருந்தது. காலப்போக்கில் பட்டாசுகள் அதில் ஒரு அங்கமாகிவிட்டன. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பட்டாசுகளை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதற்கு பதிலாக பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

முரண்பாடான தில்லி ஐஐடி ஆய்வு

அதே சமயத்தில் ஐஐடி-தில்லி ஆய்வாளா்கள் தலைமையிலான ஆய்வில், தீபாவளிக்கு அடுத்த நாட்களில் தேசிய தலைநகரில் மோசமான காற்றின் தரத்தை பட்டாசு வெடிப்பதை விட பயோமாஸ் எரியும் உமிழ்வுகள் அதிக அளவில் தூண்டுகிறது என்கிற முடிவுகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.