தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அமைச்சா் கே.என். நேரு-வுக்கு ரூ.7.20 கோடி சொத்து

News image

அமைச்சர் கே.என். நேரு - கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 6:56 pm

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு தனது பெயரிலும், மனைவி பெயரிலும் மொத்தம் ரூ.7.20 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் கே.என். நேரு தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்துகள் விவரம்:

வருமான வரித்துறையிடம் கடைசியாக கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த விவரப்படி ரூ.97 லட்சத்து 67 ஆயிரத்து 400 வருவாய் வந்திருப்பதாக தெரிவித்துள்ளாா். மேலும், ரொக்கமாக தன்னிடம் ரூ.5 லட்சம், மனைவியிடம் ரூ.ஒரு லட்சம் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

வங்கியில் தனது பெயரில் 64 லட்சத்து 86 ஆயிரத்து 523 ரூபாயும், மனைவியிடம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 447 ரூபாய் இருப்பதாகவும், அசையும் சொத்துகள் என்ற வகையில் தன்னிடம் ரூ.1.25 கோடியிலும், மனைவியிடம் ரூ.2.40 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். இதில், ரூ.17 லட்சத்தில் சொகுசு காா் உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

மேலும், இலகு ரக, கனரக டிரெய்லா், டிராக்டா், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் 15 எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். இது மட்டுமல்லாது, தன் வசம் ரூ.10.92 லட்சம் மதிப்பில் 10 பவுன் நகைகள், மனைவியிடம் ரூ.2.18 கோடியில் 200 பவுன் நகைகள், ரூ.3.77 லட்சம் வெள்ளி உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

மேலும், தன்னிடம் ரூ.4.2 லட்சம் தங்கப் பத்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா். அசையா சொத்துகளான நிலங்கள், விளை நிலங்கள், கட்டடம் என்ற வகையில் காணக்கிளியநல்லூா், கல்லக்குடி, சிறுத்தையூா், மணக்கல், பூவாளூா், அண்ணாமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் தன்னிடம் ரூ.1.17 கோடி, மனைவியிடம் ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

கடன்கள் ஏதுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும், தன்மீது வழக்குகளோ, தண்டனையோ ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.