பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் அமோக வெற்றியைப் பெற்று, கடந்த மாா்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. இந்த மாநிலத்தில் மாநிலங்களவைக்கு காலியான 5 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இதில் பஞ்சாப் தொழில் அதிபரும் பல்வேறு சமூக அறக்கட்டளைகள் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் போன்றவற்றில் பங்குவகிக்கும் சஞ்சீவ் அரோரா, லவ்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிறுவனரான அசோக் கே மிட்டல், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளரும், தில்லி ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான ராகவ் சத்தா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தனா்.