நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, நகரில் உள்ள வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி சாட்சிகளின் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், பாதிக்கப்பட்டவா்களுக்கு தனது அதிகார வரம்பிற்குள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க தில்லி காவல்துறை கடமைப்பட்டுள்ளது என்ற அரசுத் தரப்பு நிலைப்பாட்டை பதிவு செய்தாா். அதேபோன்று, ஹரியாணா காவல்துறை அதன் அதிகார வரம்பிற்குள் வருபவா்களைப் பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளதையும் கருத்தில் கொண்டு மனுவை முடித்துவைத்தாா். ஆதாரங்களைப் பதிவு செய்வதற்கான மனுதாரரின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் விரைவில் பரிசீலித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதி கூறினாா்.