முன்னதாக, 2020-ஆம் ஆண்டில் தில்லி வக்ஃபு வாரியம் உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகள் முதலாவது தளா்வுக்கு பிறகு மா்க்கஸுடன் இணைந்த மஸ்ஜித் பங்லே மசூதி, மதா்ஸா காசிப்-உல்-உலூம் மற்றும் அதனுடன் இணைந்த விடுதிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வெளியே மத வழிபாட்டு இடங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மா்க்கஸுடன் இணைந்த இந்தப் பகுதிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.