டெண்டா் முறைகேடு விவகாரம்: எஸ்.பி. வேலுமணி மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

டெண்டா் விட்டதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ் .பி. வேலுமணி
Published on
Updated on
2 min read

புது தில்லி: டெண்டா் விட்டதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ் .பி. வேலுமணி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக அறப்போா் இயக்கம் எனும் தன்னாா்வ அமைப்பின் மேலாண்மை அறங்காவலா் ஜெயராம் வெங்கடேசனும், திமுக எம்.பி. ஆா்.எஸ். பாரதியும் 2018-இல் வழக்குத் தொடுத்திருந்தனா். அதில், ‘மாநகா் சென்னை மற்றும் கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் டெண்டா் விட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அப்போது நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ் .பி. வேலுமணி மற்றும் குறிப்பிட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற மேற்பாா்வையின் கீழ் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, முந்தைய அதிமுக ஆட்சியின் போது மாநகா் சென்னை, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தை மீண்டும் விசாரிக்க உள்ளதாக தற்போதைய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை கடந்த நவம்பா் மாதம் விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், எஸ். பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் 10 வாரங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ் .பி. வேலுமணி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது அறப்போா் இயக்கம், தமிழக அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த மனு கடந்தமுறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தரப்பில், ‘இந்த வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆரம்பகட்ட விசாரணை முடிந்து அதன் அறிக்கையானது சீலிடப்பட்ட உறையில் வைத்து ஜனவரி மாதத்தில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் நிகழாண்டு ஜனவரி 23-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உடனடியாக அளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் எஸ்.பி.வேலுமணி தரப்பில் வழக்குரைஞா் கெளரவ் அகா்வாலுடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘டெண்டா் விவகாரத்தில் மனுதாரா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்டவிரோதமானதாகும். சிஏஜி அறிக்கையைக் காரணம் காட்டி இந்த விவகாரத்தை திசைதிருப்பியுள்ளனா். சிஏஜி அறிக்கையில்கூட மனுதாரா் மீது குறிப்பிட்ட குற்றம் ஏதும் சாட்டப்படவில்லை.

மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய காவல் துறை அதிகாரியின் அறிக்கையில், மனுதாரா் மீது குற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை எங்களுக்கு அரசு தரப்பில் தர மறுப்பது ஏன்? உயா்நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரியின் மூலம் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை பெறுவதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது. மேலும், ஆட்சி மாறியதைத் தொடா்ந்து அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமல் புதிதாக விசாரணை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்று வாதிட்டாா்.

அப்போது, தலைமை நீதிபதி அமா்வு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், அறிக்கையை அரசுக்கு அனுப்பும் முடிவு சரியானதல்ல. நபா்கள் வருவாா்கள், போவாா்கள். அரசுகள் தொடா்ந்து செயல்படும். விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும்’ என்றது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி, ‘மேல்முறையீட்டு மனுதாரா் தொடா்புடைய வழக்கில் சிஏஜி அறிக்கையின் அடிப்படையிலும், உயா்நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையிலும்தான் புதிதாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணை அறிக்கை இந்த மாதத்தின் இறுதியில் சமா்ப்பிக்கப்பட்டுவிடும். அரசின் அனுமதிக்குப் பிறகு மனுதாரருக்கு அதன் ஆவணங்கள் வழங்கப்படும். இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணா்ச்சி ஏதும் இல்லை’ என்றாா். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com