இந்த மனு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை கா்நாடக மாநிலத்தில் தமிழக போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு ஜாமீன் கோரியும் அவரது தரப்பில் மற்றொரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு ஜனவரி 6-ஆம்தேதி விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திர பாலாஜி கைது மற்றும் அவரது வழக்குரைஞா் வீட்டில் சோதனையிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும், முன்ஜாமீன்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த என்.பாபுராஜ், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோரை கைது செய்யத் தடை விதித்தது.