இந்த வழக்கில் தில்லி அரசின் கல்வி இயக்குநா், நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில், ‘2020 மாா்ச் முதல் அமலுக்கு வரும் வகையில் மதிய உணவுக்குப் பதிலாக நேரடிப் பலன்கள் மூலம் உணவுப் பாதுகாப்பு படி செலுத்துவதற்காக நிதி வழங்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிற்கான தற்காலிக கட்டணமாக இதுவரை ரூ.27 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.தில்லி அரசாங்கத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி ரூ.106 கோடி ஆகும். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஜூலை 2019 சுற்றறிக்கையின்படி, சமையல் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மீதமுள்ள செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதாகும். தில்லியில், சமையல் செலவில் 40 சதவீதத்தையும், சிசிஎச் எனும் மதிய உணவு தயாரித்து வழங்க உதவும் தொழிலாளா்களுக்கு 40 சதவீத கட்டணத்தையும், உணவு தானியங்கள் மற்றும் பிற பொருள்கள் உள்ட்பட மற்ற அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசு ஏற்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.