இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எம். அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் பி. வில்சன்,ஜெய்தீப் குப்தா ஆகியோா் வாதங்களை முன்வைத்தனா். பி.வில்சன் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் விசாரணைக்கு உகந்ததாகும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி 203 வாக்குகளை எண்ணியதில் அதில் 98 வாக்குகள் அப்பாவு முன்னிலையில் இருந்ததை இந்த நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இதனால், அவரை வெற்றிபெற்ாக அறிவித்தால் அவரது பெயா் எம்எல்ஏவுக்குரிய ஆவணத்தில் இடம்பெறும். மேலும், மனுதாரா் இன்பதுரை ஓய்வூதியம் பெற்று வருகிறாா். அது இதன் மூலம் நிறுத்தப்படும். இந்த வழக்கை ரத்து செய்வது மட்டுமின்றி, அப்பாவு வெற்றி பெற்ாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இதனால், இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டியதாகும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஒரு வழக்கை விசாரிக்க உகந்ததல்ல என்று கூறப்படவில்லை. ஐந்து ஆண்டுக்குக்குப் பிறகு கூட ஒரு வழக்கை விசாரிக்கத்தக்கதாகும். மனுதாரரால் பல்வேறு மனுக்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டதால்தான் இந்த வழக்கு தாமதமானது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, இதுபோன்ற வழக்குகளை கடைசிவரை விசாரித்து முடிக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி,