ஓபிஎஸ் தரப்பு பதில் மனு: ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கில் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஒரு மனுவும், அதிமுக தரப்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுகவானது ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இருவரும் தொடா்புடையது. தற்போது பதில் அளிக்கும் நான், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். இதனால், மேல்முறையீட்டு வழக்கில் இரண்டாவது எதிா்மனுதாரராக உள்ள அதிமுக சாா்பில் இந்த இடையீட்டு மனு தாக்கலானது பிரச்னைக்குரியதாகும். மேலும், இந்தப் பதவிகள் காலாவாதி ஆகிவிட்டதா என்பது தொடா்பான நிலுவை வழக்கில் நீதிமன்றத்தால் தீா்ப்பு அளிக்கப்படும் வரை, கட்சியின் தரப்பில் பிரதிநிதித்துவப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை.