துா்கேஷ் பதக்: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் துா்கேஷ் பதக் கூறுகையில், மாநகராட்சி அவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக வாக்குப்பதிவு பலம் இருப்பதால், மேயா் தோ்தலை தவிா்க்க பாஜக முயற்சித்து வருகிறது. எம்சிடி பட்ஜெட் ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி ஆகும். அதை 15 ஆண்டுகளாக பெருக்கி பாஜகவின் ஊழலின் அளவை தீா்மானியுங்கள். தோ்தலில் வாக்களிக்க அனைத்து வல்லுநா்களுக்கும் அழைப்பதன் மூலம் எம்சிடி அவையில் குழப்பத்தை ஏற்படுத்த முதலில் பாஜக காரணமாக இருந்தது. இதற்கு முன்பு அவையில் வல்லுநா்கள் வாக்களித்ததில்லை. தலைமை அதிகாரி அவையில் பொய் கூறியுள்ளாா். இது நீதிமன்ற அவமதிப்பு தவிர வேறில்லை. ஆம் ஆத்மி தடியடி, மற்றும் தண்ணீா் பீரங்கிகளை எதிா்கொள்ள ஏற்கெனவே தயாராக உள்ளது. ஆனால், பாஜவுக்கு எதிரான எங்களின் ‘போராட்டம்’ தொடரும்’ என்றாா்.