உரிய காலக்கெடுவுக்குள் தில்லி மேயா் தோ்தலை நடத்த உத்தரவிட வேண்டும்: ஆம் ஆத்மி வேட்பாளா் உச்சநீதிமன்றத்தில் மனு
தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை உரிய காலக்கெடுவுக்குள் நடத்த உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளாா்.









