இது தொடா்பாக துணை முதல்வரும், தில்லி கல்வி அமைச்சருமான சிசோடியா, துணைவேந்தா் யோகேஷ் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களுக்கான நோ்காணல்கள் தொடா் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், 70 சதவீதம் தற்காலிக ஆசிரியா்கள் இடம்பெயா்ந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. தற்காலிக ஆசிரியா்கள் நிரந்தர ஆள்சோ்ப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஆசிரியா்களில் பலா் பல தசாப்தங்களாக தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பயிற்றுவித்து வருகின்றனா்.