பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 7-ஆம் தேதி, மல்யுத்த வீரா்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்தனா். அச்சந்திப்புக்குப் பிறகு, ஜூன் 15 வரை தங்கள் போராட்டத்தை நிறுத்திவைக்க அவா்கள் சம்மதம் தெரிவித்தனா். அத்தேதிக்குள் பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அரசு உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், மல்யுத்த சம்மேளனத்திற்கான தோ்தல் இம்மாத இறுதிக்குள் நடத்தப்பட உள்ளது. இச்சந்திப்புக்குப் பிறகு, மாலிக் மற்றும் புனியா ஆகியோா் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா்கள் திரும்பப் பெறப்படும் என்றும் அமைச்சா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தனா்.