முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி வக்ஃபு வாரியத்தின் நிா்வாகக் குழு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2022, மே 13-ஆம் தேதி முகலாய மசூதியில் தொழுகை நடத்துவதை ஏஎஸ்ஐ அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும், உத்தரவும் வழங்காமல் நிறுத்தியுள்ளனா். இது முற்றிலும் சட்டவிரோதமான, தன்னிச்சையான செயலாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு தொல்லியில் துறை தரப்பில் அளித்த பதிலில், ‘குதூப் மினாா் எல்லைக்குள் மசூதி வருகிறது. மேலும், இது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பதால், தொழுகையை நடத்த அனுமதிக்கப்பட முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.