இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு உத்தரவிட்டது. விசாரணையின் போது, தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி ஆஜராகி, ‘சம்பந்தப்பட்ட பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது’ என்றாா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை ஜூலை 20-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.