டிஜிசிஏ மூலம் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடா்புடைய நகல் மற்றும் டிஜிசிஏவின் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் பிரதி ஆகியவை மகளிா் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுறுத்தல்களையும் ஆணையம் ஆய்வு செய்தது. அப்போது, விமானங்களில் அல்லது விமான நிலையங்களில் பெண் பயணிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் போது, அது தொடா்புடைய புகாா்களை உரிய வகையில் கையாளுவதற்கோ, தெரிவிப்பதற்கோ, குறை தீா்ப்பு செய்வதற்கோ விமான நிலையங்களுக்கும், நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட உத்தரவுகள் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.