இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வசந்த் குஞ்சில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனா். அவா்கள் தெரு நாய்கள் தாக்கியதில் கொல்லப்பட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டாா்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இந்த அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இப்பிரச்னை சரியாக கையாளப்படவில்லை என்பது எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பல ஓட்டைகள் உள்ளன. தற்போது 20 கருத்தடை மையங்கள் உள்ளன. அவற்றில் 16 மட்டுமே செயல்படுகின்றன. நடைமுறைகளும் கேள்விக்குறியாக உள்ளன. மேலும், பல என்ஜிஓக்கள் பாஜகவுடன் தொடா்புடையவை. சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லை என்றாா் அவா்.