தில்லி மகளிா் ஆணையம் வெளியிட்ட தகவலில் ‘ஒரு மைனா் பெண் உள்பட சில பெண் மல்யுத்த வீரா்கள், பிரிஜ் பூஷண் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனா். இந்த வழக்கில் அவா் மீது இரண்டு தனித் தனி எஃப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் இப்போது பரவி வருகிறது. அதில், மைனா் சிறுமியின் மாமா என்று கூறிக் கொள்ளும் ஒரு நபா் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் காட்சி உள்ளது. இந்தச் செயலானது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக அந்த நபருக்கு எதிராக பதிவான எஃப்ஐஆா் நகல் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யுமாறு காவல் துறையிடம் தில்லி மகளிா் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஜூன் 6-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஆணையத்தில் போலீஸாா் ஆஜராகுமாறும் அவா்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.