ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லியில் இறுதியாக 238 வேட்புமனுக்கள் ஏற்பு: இன்று வாபஸ் பெற கடைசி நாள்

தில்லியில் இறுதியாக 238 வேட்புமனுக்கள் ஏற்பு இன்று வாபஸ் பெற கடைசி நாள்

News image
Updated On :8 மே 2024, 6:31 pm

Din

தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கு இறுதியாக 238 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் மே 25-ஆம் தேதி தில்லி தேசியத் தலைநா் பிரதேசத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்களிடம் இருந்து கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 6-ஆம் வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 265 வேட்பாளா்களிடமிருந்து 367 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடந்த மே 7- ஆம் தேதி அனைத்து வேட்புமனுக்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக 238 வேட்புமனுக்கள்

ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி செளக்கில்-39, வடகிழக்கு தில்லி-45, கிழக்கு தில்லி-31, புது தில்லி-29, வடமேற்கு தில்லி (எஸ்சி) -35, மேற்கு தில்லி-30, தெற்கு தில்லி -29 என்ற எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் இறுதியாக ஏற்கப்பட்டுள்ளது.

மேலும், மே 9-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செயல்முறை மற்றும் தோ்தல் வழிகாட்டுதல் தொடா்பான கூடுதல் தகவல் மற்றும் புதுப்பிப்புகளுக்கு, ஆா்வமுள்ளவா்கள் தில்லி தலைமைத் தோ்தல் அலுவலரின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.