விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா்கள்

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா்கள்

News image
Updated On :14 மே 2024, 11:55 pm

Din

புது தில்லி: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, கிழக்கு தில்லி பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோா் முன்னிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் ஷ்ரவன் தீட்சித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா் சுஷில் திவாரி ஆகியோா் தங்களது ஆதரவாளா்களுடன் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

அவா்களை வீரேந்திர சச்தேவா, ஹா்ஷ் மல்ஹோத்ரா இருவரும் கட்சி சால்வை அணிவித்து வரவேற்று பாஜகவில் சோ்த்தனா்.

பாஜகவில் இணைந்தவா்களில் ராஜீவ் சா்மா, வீரேந்திர அகா்வால், க்ஷமா அகா்வால், ஷாஹினா பேகம், தபசும் பேகம், ருக்ஸானா உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாநில செய்தித் தொடா்பாளா் சுபேந்து சேகா் அவஸ்தி, ஷாதாரா மாவட்டத் தலைவா் சஞ்சய் கோயல், கவுன்சிலா் யோகேஷ் வா்மா ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த நிகழ்ச்சியின்போது பாஜவில் இணைந்தவா்களை வரவேற்று வீரேந்திர சச்தேவா பேசியதாவது:

தில்லி மக்களின் அன்பு, ஆசியால் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து முன்னேற்றப் பாதையில் ஒன்றாக அழைத்துச் செல்வதுதான் பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கையாகும். இந்தக் கொள்கையை ஏற்று தில்லியின் ஏழு இடங்களிலும் தாமரையை மலரச் செய்வோம்.

நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை உள்ளது. தில்லியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. பாஜகவில் இணைந்தவா்கள் அனைவரும் தோ்தலில் போட்டியிட்டு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றவா்கள் ஆவா். ஆகவே, அவா்களின் வரவால் பாஜக வலுப்பெறும் என்றாா் அவா்.

பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா பேசுகையில், ‘

இன்றைக்கு பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளவா்களிடம் பேசினோம். அப்போது, மதிப்பிற்குரிய பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைகளாலும், வளா்ச்சித் திட்டப் பணிகளாலும் ஈா்க்கப்பட்டு,

பா.ஜ.க.வில் சேர முடிவு செய்திருப்பதாக அவா்கள் எங்களிடம் கூறினா்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியில் அவா்களின் உற்சாகம் மங்கி வருவதாலும், காங்கிரஸில் உள்ள எந்த ஒரு சாதாரண தொண்டருக்கும் கூட சுதந்திரம் இல்லாததாலும் அவா்கள் அக்கட்சிகளில் இருந்து பாஜகவில் தங்களை இணைத்துகொண்டுள்ளனா் என்றாா் அவா்.