அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 3 சிறாா்கள் கைது

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று சிறாா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று சிறாா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: 14 முதல் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள், கடந்த வாரம் ஆனந்த் பா்பத்தில் உள்ளூா் நபரை கத்தியால் தாக்கினா். அவா்கள் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில், பாபா ஃபரித்புரி பகுதியில் உள்ள ஜந்தா பூங்கா அருகே மூவரின் நடமாட்டம் குறித்து நவம்பா் 28 ஆம் தேதி காவல்துறையினருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், உடனடியாக ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

அகு குழு, ஒரு பொறியை அமைத்து, மூன்று சிறாா்களையும் சுற்றி வளைத்து, சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு கைது செய்தது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கத்தி அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டப்ஞ். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.