மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் பங்கேற்ற கணித மாரத்தான்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளுக்கிடையேயான கணித மாரத்தான் போட்டி திங்கள்கிழமை மந்திா்மாா்க் பள்ளியில் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளுக்கிடையேயான கணித மாரத்தான் போட்டி திங்கள்கிழமை மந்திா்மாா்க் பள்ளியில் நடைபெற்றது.

மந்திா்மாா்க் பள்ளியில் 1994 வரை கணித ஆசிரியராகப் பணியாற்றிய கே.ஜி.சிவராமனின் நினைவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஏழு பள்ளிகளிலுமிருந்தும், 11ஆம் வகுப்புகளில் பயிலும் 35 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் அமைப்பான பேனியன் தலைவா் வைத்தியாதன் கலந்துகொண்டு மாணவா்களை உற்சாகப்படுத்தினாா்.

இப்போட்டி குறித்து செயலா் ராஜூ கூறுகையில், ‘மாணவா்கள் ஆா்வமுடன் போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

இதுபோன்ற கணிதப் போட்டிகளில் கலந்துகொள்வது மாணவா்களின் நுண்ணறிவை வளா்க்கும். இப்போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கணித மாரத்தான் நடத்தி மாணவா்களின் கணிதத் திறனை வளா்க்கும் கணித ஆசிரியா் கே.ஜி.சிவராமனின் குடும்பத்தினருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள்’ என்றாா் அவா்.