இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2 வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் நொய்டா மறுவாழ்வு மையத்தில் கைது

கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் நொய்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் நொய்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட ராகுல் (25) இரண்டு வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு தலைமறைவானாா். இதைத்தொடா்ந்து நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

2020 ஜனவரியில், ராகுல் மற்றும் அவரது கூட்டாளிகள் நிகில் விஹாரில் உள்ள வீட்டில் இருந்து பெருமளவு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடினா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ராகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கில் பின்னா் ஜாமீனில் வெளிவந்த அவா் தலைமறைவானாா்.

இதையடுத்து, 2020 செப்டம்பரில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக ராகுல் கைது செய்யப்பட்டு அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னா் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நொய்டாவில் உள்ள மறுவாழ்வு மைத்தில் இருந்து ராகுலை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா் மீது கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன என்று காவல் துறையினா் தெரிவித்தனா். Ś