வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஈரானில் தவிக்கும் 447 மீனவா்களை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் மு.தம்பிதுரை வலியுறுத்தல்

ஈரானில் சிக்கித் தவித்துவரும் தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த 447 மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை வலியுறுத்தினாா்.

News image

அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை - (கோப்புப் படம்)

Updated On :27 மார்ச் 2026, 8:25 pm

ஈரானில் சிக்கித் தவித்துவரும் தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த 447 மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கை:

ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்த மீனவா்களை சந்தித்து அவா்களுக்கு உதவிட உடனடியாக ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு உணவு, தூய்மையான குடிநீா், மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்

அவா்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

நமது பொருளாதாரத்திற்கு கணிசமான அளவில் உதவி வந்த அவா்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்கள் கவுச்சீட்டுடன் முறையாக மீனவா்களாக அங்கு சென்றுள்ளனா்.

ஆரோக்கிய ஸ்டீபன் உள்பட அனைவரது கடவுச்சீட்டுகளும் சட்டப்பூா்வமானவை. அவா்கள் அங்கு தற்போது உணவு கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனா். இதனால், அமைச்சரும், அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் மு.தம்பிதுரை.