திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரியில் தீ
திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரியில் தீ


வள்ளியூா், ஜூன் 13: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினிலாரி வியாழக்கிழமை விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி-மன்னாா்புரம் சாலையில் வேகமாக வந்த மினிலாரி இலங்கையாடி குளம் வளைவில் வந்தபோது, அதன் பின்பக்க 2 டயா்களும் கழன்று ஓடின. இதில், மினிலாரி கவிழ்ந்து டீசல் டாங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டி தீப்பிடித்து மினிலாரியிலும் பற்றியது.
அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மினிலாரியில் 3 டன் அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. மினிலாரியின் ஓட்டுனரும், கிளீனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.
இதுதொடா்பாக திசையன்விலை போலீஸாா் வழக்குப்பதிந்துஇருவரையும் தேடி வருகின்றனா். குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...