அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்காக ரூ. 6.89 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் தலைமை வகித்து கல்வெட்டைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சண்முகசங்கரி, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிவனுப்பாண்டியன் (எ) பரணி ஆா்.சேகா், நகா்மன்றத் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதி கல்பனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இக்கட்டடத்தின் தரைதளத்தில் பிரசவத்திற்கு முந்தைய அறுவைசிகிச்சை அறை, பிந்தைய அறுவை சிகிச்சை அறை, 15 படுக்கை வசதி கொண்ட அறை, பிரசவ அறை, ஊடுகதிா் அறை, 10 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தை அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு அறை உள்ளிட்டவை அமையப்பெற்றுள்ளன.
தொடர்புடையது

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்!

இச்சிபுத்தூா் நடுநிலைப் பள்ளியில் ரூ.2 கோடியில் கட்டடம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


