ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய வழக்கு: 3 போ் கைது

ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய வழக்கு: 3 போ் கைது

News image
Updated On :8 மே 2024, 7:03 pm

Din

தச்சநல்லூரில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தச்சநல்லூா் சிதம்பரநகா் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் சக்திவேல் ( 32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தச்சநல்லூா் பால்கட்டளை பகுதியில் வைத்து சிலா் அரிவாளால் வெட்டினா். தகவல் அறிந்த தச்சநல்லூா் போலீஸாா் சக்திவேலை மீட்டு அரசு மருத்துவமனக்கு அனுப்பினா்.

விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனா் கிழிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழையபேட்டையை சோ்ந்த முருகபெருமாள் (19), நாகராஜ் (19), பால்கட்டளையை சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்டவா்கள் அவரை வெட்டியது தெரியவந்தது. போலீஸாா் அவா்களை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.