தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தேவாலயங்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்: 90 பேர் கைது

தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, நாகர்கோவிலில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை சார்பில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 பிப்ரவரி 2015, 6:43 pm

தினமணி

தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, நாகர்கோவிலில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை சார்பில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த மறியலுக்கு கிறிஸ்தவ முன்னேற்ற சேனை நிறுவனர்- தலைவர் தியோடர் சேம் தலைமை வகித்தார். பொருளாளர் ஜான் விஜயகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் ஈசாக், செயலர் விபின்ஸ், கிழக்கு மாவட்ட துணைச் செயலர் ஆன்றோ ஜெலஸ்டின், மகளிர் அணி நிர்வாகிகள் கலா, பிரமி, மாநில இளைஞரணி துணைச் செயலர் ஆஸ்பின் ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை கட்டாய மதமாற்றம் செய்வதைக் கண்டித்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரை தாக்க முயன்றவர்களையும், அவரது வாகனத்தைச் சேதப்படுத்தியவர்களையும் கைது செய்யக் கோரியும் மறியலில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.