கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சூறைக்காற்றுடன் மழை: மார்த்தாண்டம் அருகே தென்னை மரம் முறிந்து மின்கம்பியில் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு

களியக்காவிளை, மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

Updated On :30 ஜனவரி 2024, 10:00 pm IST

களியக்காவிளை, மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் தென்னை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில் அப்பகுதி வழியாக 3 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது.
மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் காரணமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள், கனரக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இரவிபுதூர்கடை பகுதியிலிருந்து திரும்பி மாமூட்டுக்கடை, விரிகோடு, மார்த்தாண்டம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் விரிகோடு சந்திப்பு அருகே சாலையோரம் நின்ற தென்னைமரம் முறிந்து அருகிலுள்ள மின்கம்பி மீது விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதுடன், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. 
இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து தென்னை மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.