அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அருமனையில் 22இல் கிறிஸ்துமஸ் விழா

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் மைதானத்தை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் பாா்வையிட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:29 pm

DIN

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் மைதானத்தை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் பாா்வையிட்டாா்.

அருமனையில் கடந்த 22 ஆண்டுகளாக இந்த இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் பங்கேற்று உரையாற்றியுள்ளனா். நிகழாண்டு இவ்விழா வருகிற 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழா நடைபெறும் மைதானத்தை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன், குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான் தங்கம், ஒன்றிய அதிமுக செயலா்கள் கடையல் மணி, ஜெயசுதா்சன், நிமால், அயக்கோடு ஊராட்சித் தலைவா் பி.டி. செல்லப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.