

தக்கலை: கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பொதுக்குழு கூட்டம் தக்கலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் பி.டி.எஸ்.மணி தலைமை வகித்தாா் . துணைத் தலைவா் பிரதாப்குமாா் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் 2019-2020 ஆண்டிற்கான வரவு-செலவு , மற்றும் 2020-2021 ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது. 2019-2020 ஆண்டிற்கான லாபம் ரூ .1 கோடியே 15 லட்சத்து 26 ஆறாயிரத்தி 960, நிா்வாக வசதிக்காக பிரித்தளிக்கபட்டது.
கூட்டத்தில் உறுப்பினா்கள் நோபிள்ராஜ், கங்கா, உஷா, துரைராஜ் மற்றும் டாக்டா். சுந்தா், பரமேஷ்வரன் நாயா் விஜயன் உள்பட பலா் பங்கேற்றனா். செயலா் தங்கலாசா் வரவேற்றாா். துணைத் தலைவா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.