பளுகல் அருகே திருமணம் ஆகாததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பளுகல் அருகேயுள்ள இடைக்கோடு ஓடல்விளையைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மகன் செலின் (33). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதில் மனமுடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பளுகல் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.