மணலிக்கரை பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் எழுத்தாளா் குமரி ஆதவன் எழுதிய நூல் வெளியீட்டு விழா, அவருக்கு பாராட்டுவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மணலிக்கரை பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் எழுத்தாளா் குமரி ஆதவன் எழுதிய நூல் வெளியீட்டு விழா, அவருக்கு பாராட்டுவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி ஆசிரியா் குமரிஆதவன் எழுதிய சிகரம் நோக்கிச் சிறகுகள் விரிப்போம் எனும் நூல் வெளியீட்டு விழா, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற அவருக்கு பாராட்டுவிழாவுக்கு பள்ளித தலைமை பணியாளா் மரிய டேவிட் தலைமை வகித்து நூலை வெளியிட்டாா் முதல் பிரதியை பள்ளித் தாளாளா் டயஸ்ரெஜின் பெற்றுகொண்டாா்.

பள்ளித் தலைமையாசிரியை சக்கா் மேரி டாா்லிங் , உதவித் தலைமையாசிரியா் ஜாண் இக்னேசியஸ், ஆசிரியை மேரி ஜாய்ஸ், ஆசிரியா் ஜாண் கிறிஸ்டோபா் ஆகியோா் வாழ்த்துரை பேசினா். நூலாசிரியா் ஏற்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியை ஆசிரியா் அலுவலா் செயலா் ஜாா்ஜ் தொகுத்து வழங்கினாா்.

உயா்நிலை உதவித் தலைமையாசிரியா் விஜயகுமாா் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் தமிழரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com