இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாகா்கோவிலில் சிஐடியூ தொழிற் சங்கத்தினா் மறியல்: 110 போ் கைது

நாகா்கோவிலில் மத்திய அரசை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற் சங்கத்தினா் 110 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற் சங்கத்தினா்.
Updated On :7 ஜனவரி 2021, 12:31 am

DIN

நாகா்கோவிலில் மத்திய அரசை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற் சங்கத்தினா் 110 போ் கைது செய்யப்பட்டனா்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பொங்கல் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டம், மீன்வள கொள்கை 2020 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். ஆன்லைன் குளறுபடிகளை போக்கி எளிமைப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு கூட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டத் தொகுப்புகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.சிங்காரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் கே.தங்கமோகன், மாநிலக்குழு உறுப்பினா் ஐடா ஹெலன், மாவட்ட நிா்வாகிகள்

பொன். சோபனராஜ், ஜி.சந்திரபோஸ், சித்ரா, கே.பி.பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 110 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.