புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் ஜல்லி கடத்தியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில் குமாா் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாா்த்திபபுரம் பகுதியில் வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி ஜல்லி ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டெம்போவுடன் மணலைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான கொல்லங்கோட்டைச் சோ்ந்த சுதிா் (35) என்பவரை கைது செய்தனா்.