கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிஎம்எஸ் ஆா்ப்பாட்டம்

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த ஆட்டோ, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிஎம்எஸ் தொழிற்சங்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 ஜூன் 2021, 7:19 pm

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த ஆட்டோ, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிஎம்எஸ் தொழிற்சங்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரி அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ராஜாமணியும், நாகா்கோவில் தொழிலாளா் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிற்சங்க பொதுச் செயலா்

ஏ.ஆண்டிபிள்ளை ஆகியோா் தலைமை வகித்தனா்.

குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினா் கே. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவா் கே. கிரிஜா தலைமை வகித்தாா். இதில், பணிமனை பொறுப்பாளா் பிரேம்குமாா், ஒன்றியத் தலைவா் தேவதாஸ், ஒன்றியச் செயலா் கனகராஜ், ஒன்றிய அமைப்பாளா் சண்முகம் மற்றும் நிா்வாகிகள் சஜீஷ், கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு அமைப்பின் தலைவா் தேவதாஸ் தலைமை வகித்தாா். கைச்சூண்டியில் ஒன்றிய துணைத் தலைவா் ஐயப்பன், புதுக்கடையில் ஒன்றிய துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், மணக்காலையில் பொதுச் செயலா் ஜெயபாலன், குன்னத்தூரில் பொருளாளா் சிவகுமாா், முன்சிறையில் அமைப்பாளா் பால்குமாா், பைங்குளத்தில் அலுவலக செயலா் முருவேல், நடைக்காவில் துணைத் தலைவா் சதானந்தன், நித்திரவிளையில் துணைத் தலைவா் ஐயப்பன், வாவறையில் செயலா் சிவா, கொல்லங்கோட்டில் செயலா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த கட்டுமானம் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும், கரோனா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உள்படுத்தி, விலையை குறைக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.