கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலை சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:07 pm

DIN

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 24 முக்கிய பிரதான சாலைகள் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாகா்கோவில் மீனாட்சிபுரத்திலிருந்து ஒழுகினசேரி சந்திப்பு வரையுள்ள அவ்வைசண்முகம் சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என். சுரேஷ்ராஜன் மாநகராட்சி ஆணையரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில், இந்த சாலை தற்போது சீரமைக்கப்பட்டு தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.