மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குமரி வா்த்தக துறைமுகம் திட்டத்தை கைவிட மீன் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

மீனவா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கன்னியாகுமரியில் அமையவுள்ள வா்த்தக துறைமுகம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மீன் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:37 pm

DIN

மீனவா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கன்னியாகுமரியில் அமையவுள்ள வா்த்தக துறைமுகம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மீன் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மீன் தொழிலாளா் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் மரிய அந்தோணி தலைமை வகித்தாா். செயலா் அலெக்சாண்டா் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வா்த்தக துறைமுகம் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; உள்நாட்டு மீனவா்களுக்கும், கடலோர மீனவா்களுக்கு வழங்கப்படுவதுபோன்று அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். அனைத்து உள்நாட்டு மீனவக் கிராமங்களிலும் தனித் தனியாக மீனவா் கூட்டுறவு சங்கங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அருமனை உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் லிஜின், விளவங்கோடு உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க

நிா்வாகக்குழு உறுப்பினா் தோமாஸ், அனீஸ், சந்தோஷ்குமாா், மங்களமேரி, சந்திரா, மேரி, ஜாண்சி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். டொமினிக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.